states

img

அறிவியல் இயக்க முன்னாள் தலைவர் அ.வள்ளிநாயகம் காலமானார்

சென்னை, நவ. 29 - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  முன்னாள் மாநிலத் தலைவர் முனை வர் அ.வள்ளிநாயகம் வெள்ளியன்று (நவ.29) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 78. அன்னாரது உடல் , நெமி லிச்சேரி, குரோம்பேட்டையில் உள்ள  இல்லத்தில்  அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. அன்னாரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் ( தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை),  அறி வியல் இயக்க மாநில பொருளாளர் எஸ். சுதாகர், துணைச் செயலாளர் என்.மாத வன் உள்ளிட்டோர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். அன்னாரது உடல் சனிக்கிழமை யன்று (நவ.30) காலை 8.30 மணி அள வில் அஸ்தினாபுரம் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் இரங்கல் அறிக்கையில், தமிழ்நாட்டின்  அறிவியல் இயக்க செயல்பாட்டாள ரும், சிந்தனையாளருமான முனைவர் அ. வள்ளிநாயகம் சென்னையில் கால மானார் என்ற செய்தி வேதனை தரு கிறது. அறிவியல் மற்றும் மக்கள் நல்லி ணக்கத்திற்காகப் பாடுபட்ட சிறந்த அறிவுஜீவி. பன்முக திறமைகளைக் கொண்டி ருந்த வள்ளிநாயகம். சாதி மறுப்பிலும், அறிவியல் மேம்பாட்டிலும்  முன்னோ டியாகத் திகழ்ந்தார்.அவரது குடும்பத் தார், நண்பர்கள், உறவினர்கள், அறி வியல் இயக்க தோழமைகள் அனை வருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரி விக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சென்னை, நவ.29- எழுத்தாளர், அறிவியல் இயக்க  முன்னோடி வள்ளிநாயகம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்  தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழ கத்தின் மேனாள் பதிவாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எழுத்தறிவு இயக்கத் தின் முன்னோடி எழுத்தாளர் முனை வர் அ.வள்ளிநாயகம் மறைவுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். முனைவர்.அ. வள்ளிநாயகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவராக பல்லாண்டு காலம் பணியாற்றியவர். துளிர் இதழின் ஆசிரியர் குழுவில் இருந்து, கடந்த 25 ஆண்டுகளாக நடந்துவரும் துளிர் திறனறிதல் தேர்வை  துவங்கியவர். எழுத்தாளர், ஆய்வாளர், மொழி பெயர்ப்பாளர், களப்பணியாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.  குடும்பத்துடன் அறிவியல் இயக்கத் தில் பங்கேற்ற முன்னுதாரணமாக இயங்கிய முனைவர் அ.வள்ளிநாயகம் அவர்களின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரங்கல் தெரிவிக்கிறோம். அவரது இழப்பால் வாடும், குடும்பத்தினர், முற்போக்கு அறிவியல் இயக்கத்தார், உறவினர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த  அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.