சென்னை,ஜூலை 10- தரம் குறைந்த பயண வழி உணவகங்களில் பேருந்து கள் நிறுத்தப்பட்டால் பெய ரைக் குறிப்பிட்டு புகார் அளிக்க வேண்டும் என பய ணிகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். இது தொடர்பாக அதி காரிகள் கூறியதாவது:- திறந்தவெளி ஒப்பந்த புள்ளி மூலமாகத் தேர்வு செய்யப்பட்ட சாலையோர பயணவழி உணவகங்களில் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் உணவின் தரம், கழிப்பறை வசதி, பராமரிப்பு போன் றவை குறித்து அவ்வப் போது பயணிகளிடம் இருந்து வரும் புகார்களின் அடிப்படையில் போக்கு வரத்து கழகம் அலுவலர்கள் உணவகங்களில் அவ்வப் போது ஆய்வு மேற்கொண்டு குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய உணவக உரிமையாளர்கள் அறிவுறுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதை மேம்படுத்தும் வகையில் உணவகங்கள் குறித்த புகார்களை தெரி விக்க முன்பதிவு செய்யும் பயணிகள் கைப்பேசிக்கு லிங்க் ஒன்று பயணத்தின் முன்பாக அனுப்பப்படும். இந்த இணைப்பில் பயணி கள் உணவகங்களில் உள்ள குறை, நிறைகளை பதிவிட்டு அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த வசதியில் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வர பெறுகின்றன. ஆனால் தெளிவாக இல்லை. வரும் காலங்க ளில் உணவகங்கள் எந்த முறையில் விதிமீறலில் ஈடுபடுகின்றன என்பதை தெளிவாக உணவகத்தின் பெயருடன் அனுப்பினால் நடவடிக்கை எடுக்க எளிதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.