states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மருத்துவப்படிப்புக்கு ஒரே நாளில்  4200 விண்ணப்பம்

சென்னை, ஜூலை 29- தமிழ்நாட்டிலுள்ள 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார்  மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.  நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். அரசுப் பள்ளியில் படித்து தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கின்றனர். புதன்கிழமை (ஜூன் 28) ஒரே  நாளில் 4200 பேர் விண்ணப்பித்துள் ளனர். 1500 பேர் பதிவு கட்டணம் செலுத்தி யுள்ளனர். அரசு கல்லூரி ஒதுக்கீட்டு இடங்கள் மட்டும் 5050 உள்ளன. இது  தவிர 3 தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் 450 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.  கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவ மனையில் 75-லிருந்து 125 இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால்  கடந்த ஆண்டை விட இந்த வருடம் கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவப் படிப்புகளில் சேருவ தற்கு ஜூலை 10 ஆம் தேதி கடைசி 

மக்களை சந்திக்க காவல் ஆணையர்கள், எஸ்.பி.,க்களுக்கு  அரசு உத்தரவு

சென்னை,ஜுலை 29- தமிழ்நாடு முழுவதும் காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் புதன்கிழமை தோறும் பொது மக்களை கட்டாயம் சந்திக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு  அரசாணை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தால், அது பற்றி காவல்துறை ஆணை யர்கள் மற்றும் மாவட்ட காவல் கண் காணிப்பாளர்கள் சந்தித்து முறைச் யிடுவது கஷ்டமாக இருப்பதாக குற்ற சாட்டு இருந்து வந்தது. இதனை போக்கும் விதமாக வாரத்தில் ஒரு நாள் புதன்கிழமை தோறும் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பொதுமக்களை சந்திக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 

அடுத்த 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூன் 29- தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்த அறிக்கை வருமாறு:- மேற்கு திசை காற்றின் வேக மாறு பாடு காரணமாக, ஜூன் 30 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 1 மற்றும் 2 ஆம் தேதிகளில்  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 3 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை,  திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தங்கம் விலை குறைந்தது

சென்னை,ஜூன் 29- சென்னையில் கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலை யில் ஜூன் 28 புதன்கிழமை சவரனுக்கு ரூ.232 குறைந்தது. வியாழனன்று (ஜூன் 29) சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ. 43,490-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5,437-க்கு விற்பனையானது.