பியாங்யாங், மே 14- வட கொரிய தொழிலா ளர் கட்சியின் பொதுச் செய லாளரும் தேசிய விவகார ஆணையத் தலைவருமான கிம் ஜோங் உன் மே 12ஆம் நாள் நாட்டின் அவசர நோய்த் தொற்று தடுப்பு ஆணையகத்தில் பயணம் மேற்கொண்டார் என்று வட கொரிய மத்திய செய்தி நிறு வனம் 13ஆம் நாள் செய்தி வெளியிட்டது. இந்த தகவலின்படி, ஏப்ரல் இறுதி முதல், கார ணம் தெரியாத காய்ச்சல் வட கொரியாவில் தீவிரமாகப் பரவி வருகிறது.குறுகிய காலத்தில் காய்ச்சல் நோயா ளிகள் எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேலாகும். இவர்களில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 200 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், 12ஆம் நாள் மட்டும், அந்நாட்டில் 18 ஆயிரம் பேர் இக்காய்ச்சலால் பாதிக் கப்பட்டனர். கோவிட்-19 நோயாளி ஒருவர் உள்பட 6 பேர் உயிரிழந் தனர் என்று தெரியவந்துள்ளது.