states

வாலிபர் சங்க மாநில மாநாடு: செப்.11 - கள்ளக்குறிச்சியில் பேரணி

கள்ளக்குறிச்சி, செப்.8- இம்மாதம் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் கள்ளக்குறிச்சி நகரில்  நடைபெற உள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாட்டு  பேரணி, பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி கள் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. எனவே, இம் மாநாட்டின் ஊர்வலத்திற்கு வரும் தோழர்கள் கவனத்திற்கு.... சேலம் மார்க்கமாக வரக்கூடிய வாகனங்கள் கள்ளக்குறிச்சி நகருக் குள் செல்லாமல் பைபாஸிலேயே வந்து ஏ.கே.டி கல்வி நிறுவனம் வழியாக கள்ளக்குறிச்சி நகருக்குள் வரவேண்டும். நகரின் முகப்பில் ஏ.எம்.சி  மருத்துவமனை அருகில் தோழர்களை  இறக்கி விட்டு விட்டு மீண்டும் வந்த  வழியே திரும்பிச் சென்று ஏ.கே.டி  கல்வி நிறுவனத்தை தாண்டி இடது புறம் அமைந்துள்ள மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையமாக செயல்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டும்.

 திருவண்ணாமலை மார்க்கமாக சங்கராபுரம் வந்து கள்ளக்குறிச்சி வரும்  தோழர்கள் கள்ளக்குறிச்சி தியாகதுரு கம் சாலையில் வந்து ஏ.எம்.சி மருத்துவமனை அருகில் தோழர்களை இறக்கி விட்டு விட்டு அதே சாலையில் நேராக வந்து மேலே குறிப்பிட்டுள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டும். அதேபோல் உளுந்தூர்பேட்டை மார்க்கமாக வரக்கூடிய அனைத்து வாகனங்களும் ஏ.கே.டி கல்வி நிறுவ னம் வழியாக நகருக்குள் வந்து ஏ.எம்.சி மருத்துவமனை அருகில் தோழர் களை இறக்கி விட்டு விட்டு வந்த  வழியே சென்று மேலே கூறியுள்ள  வாகனம் நிறுத்தும் இடத்தில்  வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். ஏ.எம்.சி மருத்துவமனை அருகில் இருந்து மாநாட்டு பேரணி துவங்கும்.  மழைக்காலமாக இருப்பதால் அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ள இரண்டு மணிக்கு பேரணி துவங்கும் வகையில் அனைத்து தோழர்களும் குறித்த நேரத்தில் பேரணி துவங்கும் இடத்திற்கு வருகை தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். சேலம், கள்ளக்குறிச்சி சாலையில்  பிரதிநிதிகள் மாநாடு நடைபெறும் பாப்பாத்தி அம்மாள் மண்டபம் அருகே  பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள், பாரதி புத்தகாலயத்தின் புத்தகக் கண் காட்சி உள்ளிட்டவை நடைபெறும். இந்த தகவலை மாநாட்டு வரவேற்புக் குழு தெரிவித்திருக்கிறது.

;