states

img

ஜார்கண்ட்: பழங்குடியின மாணவரின் உடல் தூக்கில் தொங்கியபடி மீட்பு

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் 17 வயது பழங்குடியின மாணவரின் உடல் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு படிக்கும் பழங்குடியின மாணவரின் உடல் மரத்தில் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதேபோல், கடந்த வாரம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 14-வயது பழங்குடியின சிறுமி கொலை செய்யப்பட்டு மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;