ஸ்ரீநகர் 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இது வரை 2 கட்ட வாக்குப் பதிவு (50 தொகு திகளுக்கு) நிறைவு பெற்றுள்ளது. கடைசி கட்ட வாக்குப்பதிவு (40 தொகு திகளுக்கு) அக்டோபர் 1 அன்று நடை பெறவுள்ள நிலையில், வியாழனன்று நடைபெற்ற 2ஆம் கட்ட வாக்குப் பதிவை அமெரிக்கா, ஐரோப்பிய யூனி யன், ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 வெளிநாட்டு தூதரகங்க ளைச் சேர்ந்த அதிகாரிகள் குழு பார்வை யிட்டதாக செய்தி ஒன்று வெளியாகி யுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடக்கிறது என்பதை உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தவே மேற் குறிப்பிட்ட வெளிநாட்டு தூதரக அதிகாரி களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என மோடி அரசு கூறியுள்ளதாகவும் மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ள நிலையில், இந்நிகழ்விற்கு “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் உமர் அப்துல்லா கூறுகை யில்,”இந்தியாவில் நடக்கும் பிரச்ச னைகள் குறித்து வெளிநாட்டினர் கருத்துக் கூறினால், உள்நாட்டு விவ காரங்களில் எதற்கு தலையிடுகிறீர்கள் என்று பாஜகவினர் கேட்கின்றனர். ஆனால் இப்போது இந்தியாவின் ஒரு பகுதியான ஜம்மு-காஷ்மீரின் தேர்த லை கண்காணிக்க வெளிநாட்டினரை எதற்கு அழைத்து வருகிறார்கள் என தெரியவில்லை. இப்போது நாங்கள் சொல்கிறோம். இது எங்கள் உள்விவகா ரம், இதில் வெளிநாட்டினரின் சான்றிதழ் எங்களுக்கு தேவையில்லை” எனக் கூறி அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.