ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் 77 பயணிகளுடன் இன்று சென்று கொண்டிருந்தது. அம்ரித்சரில் இருந்து கட்ரா நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, ஜஜ்ஜர் கோட்லி என்ற இடத்தில் சாலையோரம் இருந்த மிகப்பெரிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 55 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
துணை ராணுவ படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் ஜம்மு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.