90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீரில் அடுத்த வாரம் சட்ட மன்ற தேர்தல் (3 கட்டமாக) தொடங்க உள்ள நிலையில், அங்கு பயங்கரவாதிகளின் தாக்குதல் தீவிர மடைந்துள்ளது.
சனியன்று காஷ்மீ ரின் பாராமுல்லா மாவட்டம் சக் தாப்பர் கிரீரி பட்டான் பகுதி யில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்ப தாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அப்பகுதியைச் சுற்றி வளைத்த போலீசார் மற்றும் பாது காப்பு படையினர் தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். அப்பொழுது பதுங்கியி ருந்த பயங்கரவாதிகள், ராணுவ வீரர் கள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்கு தல் நடத்தினர். உடனே பாதுகாப்பு படை யினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். சக் தாப்பர் பகுதியில் உள்ள கட்டிடத்தில் சிக்கிய மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து பிங்னல் துகாடா வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கர வாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 2 ராணுவ வீரர்கள் (விபன் குமார், அரவிந்த் சிங்) வீரமரணம் அடைந்த னர். மேலும் காயமடைந்த 2 வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேர் தல் நேரத்தில் ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.