சென்னை, ஜூன் 13 - காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொடுங்கையூரில் வீடு ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் அலமாதியைச் சேர்ந்த ராஜசேகரை கொடுங்கையூர் காவல்துறையினர் ஜூன் 11 அன்று கைது செய்து விசாரித்துள்ளனர். அப்போது ராஜசேகர், செங்குன்றத்தில் உள்ள தனது கூட்டாளிகளிடம் நகை கள் இருப்பதாக கூறியதாக தெரிகி றது. அதன்பேரில் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்ததாகவும், இருந்த போதிலும் நகைகளை மீட்கமுடிய வில்லை என்றும் தெரிகிறது. இந்த நிலையில், ராஜசேகரை கொடுங்கையூர் புறக்காவல் நிலையத் தில் வைத்து ஞாயிறன்று (ஜூன் 12) காலை விசாரணை நடத்தி உள்ள னர். அப்போது அவர் மயக்கமடைந் துள்ளார். தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று காவலர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். அதன்பின் அங்கிருந்த மருத்துவர் அறிவுறுத்தல் படி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜசேகர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். உயிரிழந்த ராஜசேகர் மீது கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல்நிலையங்களில் நிலு வையில் உள்ளது. விசாரணை கைதி மரணம் அடைந்ததை அடுத்து சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு இணை ஆணையர் ஈஸ்வரன் நேரில் சென்று நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக கொடுங்கை யூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமைக் காவலர்கள் ஜெயசேகர், மணிவண்ணன், காவலர் சத்திய மூர்த்தி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசார ணைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தர விடப்பட்டது. இதனையடுத்து கெல்லீஸ் சிறார் 12வது நீதிமன்ற நீதிபதி லட்சுமி, கொடுங்கையூர் காவல்நிலை யம், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும், காவலர்கள், உறவினர்க ளிடம் விசாரணை நடத்தினார். இதனி டையே, பிரேத பரிசோதனை நடை பெற்றது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற 6வது காவல்நிலையச் சாவு ராஜசேகருடையது என்பது குறிப்பிடத் தக்கது.