states

img

சத்தீஸ்கர்: லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
சத்தீஸ்கரின் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து சுர்குஜா மாவட்டத்துக்கு தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் பாங்கோ காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மடாய் காட் அருகே அதிவேகமாக வந்த பேருந்து நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் நொறுங்கியது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து வழக்‍குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்

;