states

img

5 ஆண்டுகளில் ஐடியில் 67,000 வேலைகள் கொல்லம், கண்ணூரில் புதிய ஐடி பூங்காக்கள்

கொச்சி, ஜுலை 30- 5 ஆண்டுகளில் தகவல் தொழில் நுட்பத் துறையின் விரிவான வளர்ச்சிக் கான திட்டங்களை அரசு இலக்காகக் கொண்டுள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். கொச்சி இன்போபார்க்கில் இரண்டாம் கட்ட புதிய தகவல் தொழில் நுட்ப இடங்களை (ஸ்பேஸ்) முதல்வர் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், 63 லட்சம் சதுர அடியில் 67,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றார். 2016 முதல் 2021 வரை 46  லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட இடங்க ளில் 45,869 வேலைகள் உருவாக்கப் பட்டுள்ளன. கேரளாவிற்கு ஏற்ற தொழில்களில் ஐடியும் ஒன்று. நல்ல மனித வளம், அதிகம் படித்த மக்கள் தொகை மற்றும் நிம்மதியான சமூக சூழல் ஆகியவை சாதகமான காரணிகள். கே-போனின் ஒரு பகுதியாக 30,000 கிமீ ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் நிறு வப்படும். இத்திட்டத்திற்காக 1611 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

74 சதவிகித பணிகள் நிறைவடைந்துள் ளன. தேவையான சான்றிதழ்கள் மற்றும் உரிமங்கள் கிடைத்துள்ளன. சுகாதாரம், தூய்மை மற்றும் இணைய இணைப்பில் கேரளம் முன்னணியில் உள்ளது. நெடும்பாசேரி விமான நிலை யம் அருகிலும், படிப்படியாக கேரளா முழுவதும் அறிவியல் பூங்காக்கள் அமைக்கப்படும். கொச்சி-கோயம்புத்தூர் தொழில் வழித்தடமும் தயாராகி வருகிறது. தேசிய நெடுஞ்சாலை 66க்கு இணை யாக நான்கு தகவல் தொழில்நுட்ப வழித்தடங்களும் அமைக்கப்படும். திரு வனந்தபுரம் டெக்னோபார்க், கொச்சி இன்போபார்க் மற்றும் கோழிக்கோடு சைபர் பார்க் ஆகிய இடங்களில் இந்த வழித்தடங்கள் தொடங்கும். இதற் காக 15 முதல் 25 ஏக்கர் வரை நிலம் எடுக்கப்படுகிறது. 50,000 முதல் 2 லட்சம் சதுர அடியில் 20 சிறிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் தொடங்கப் படும். கே-போனின் அதிவேக ஆப்டிக் பைபர் மூலம் தொழில்நுட்ப பூங்காக் கள் இணைக்கப்படும். தாழ்வாரங்க ளில் 5ஜி தலைமைத் தொகுப்பு செயல் படுத்தப்படும். கே-போனின் உள்கட்ட மைப்பைப் பயன்படுத்தி 5ஜி புரட்சியின் பலன்கள் நாடு (கேரளம்) முழுவதும்கிடைக் கும் என்றும் முதலமைச்சர் கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் தலைமை வகித்தார்.