states

img

நிபா வைரஸ் காய்ச்சல் மலப்புரத்தில் அறிகுறிகளுடன் உள்ள 32 பேருக்கு சிகிச்சை

கேரளத்தில் மலப்புரம் மாவட் டத்தில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், கடந்த வாரம் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மலப்புரம் மாவட் டம் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப் பட்டு, கல்லூரி மாணவரின் தொடர்பு பட்டி யலில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து வருகிறது. நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது கேரள அரசு.

இந்நிலையில், நிபா வைரஸ் பரவல் தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக்குழு கூட்டத்தின் முடிவில் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகை யில்,”நிபா வைரஸ் தொடர்பாக 267 பேர்  தொடர்பு பட்டியலில் உள்ளனர். இது வரை நடைபெற்ற 78 சோதனை முடிவுகள் எதிர்மறையாக உள்ள நிலையில், நிபா  அறிகுறிகளுடன் மேலும் ஒருவர் ஞாயி றன்று மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். 

இவர் உட்பட 4 பேர் மஞ்சேரி மருத்து வக் கல்லூரி மருத்துவமனையிலும், 28 பேர் பெரிந்தல்மன்னா எம்.இ.எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையி லும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரு கின்றனர். தொடர்புப் பட்டியலில் உள்ள வர்களுக்கு சிறந்த மனநல ஆதரவு வழங்கப்படுகிறது. திங்களன்று இரண்டு பேர் உட்பட 276 பேருக்கு கால் சென்டர் மூலம் உளவியல் ஆதரவு அளிக்கப் பட்டது” என அமைச்சர் கூறினார்.