states

img

கேரள முதல்வர் அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார்

திருவனந்தபுரம். ஜூன் 1- கேரள முதல்வர் பினராயி விஜயனின் அமெரிக்கா மற்றும் கியூபா பயணத்திற்கு வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. நியூயார்க்கில் நடைபெறும் உலக கேரள சபாவின் அமெரிக்க பிராந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் மற்றும் அவரது குழுவினர் அடுத்த வாரம் அமெரிக்கா செல்கின்றனர். மண்டல மாநாட்டுக்கு கேரளாவில் இருந்து முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர், அமைச்சர் கே.என்.பாலகோபால், நோர்கா ரெசிடென்ட் துணைத் தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் மற்றும் தலைமைச் செயலர் வி.பி.ஜாய் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் செல்கின்றனர். இந்த மாநாடு ஜூன் 9, 10,11 ஆகிய தேதிகளில் நியூயார்க் கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள மேரியட் மார்க்யூ ஹோட்டலில் நடைபெறும். இந்த மாநாட்டிற்காக நோர்கா இயக்குநர்கள் யூசபலி, ரவிப்பிள்ளை, ஜே.கே.மேனன், ஓ.வி.முஸ்தபா ஆகியோர் அமெரிக்கா செல்கின்றனர். உலக கேரளா பிராந்திய மாநாட்டை தொடர்ந்து, அமெ ரிக்க வாழ் மலையாளிகள் பினராயி விஜயனுக்கு வரவேற் பளிக்க உள்ளனர். நியூயார்க் டைம் சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்டமான கூட்டத்தில் முதல்வர் உரையாற்றுகிறார். முதல்வரின் கியூபா பயணத்தில் சுகா தாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், திட்ட வாரிய துணைத் தலைவர், தலைமைச் செயலாளர், முதல்வரின் முதன்மைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் முதலமைச்சருடன் செல்கின்றனர்.