states

img

சரோஜினி பாலானந்தன் காலமானார்

       அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலை வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  முன்னாள் கேரள மாநிலக்குழு உறுப்பினரு மான சரோஜினி பாலானந்தன் (86) செவ்வாயன்று காலமா னார். இவர் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக இருந்த, மறைந்த தோழர் இ. பாலானந்தனின் மனைவி ஆவார். குழந்தைகள் சுலேகா, சுனில், சரளா மற்றும் மறைந்த சுசீலா. வெளிநாட்டில் இருந்து மகன் சுனில் வந்த பிறகு இறுதி நிகழ்ச்சிகள் நடை பெறும்.

     மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலை வர், மாநிலத் தலைவர், செயலர் ஆகிய பொறுப்பு களை வகித்துள்ளார்.

     சரோஜினி பாலானந்தன் மறைவுக்கு கேரள  முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்  ளார்.

     சரோஜினி பாலானந்தன் மகளிர் நலனில் குறிப்பி டத்தக்க பணிகளை ஆற்றியுள்ளார். பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கும், பணித் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சுரண்ட லுக்கும் எதிராகப் போராடியவர். நீதி வழங்க வலு வான தலையீடுகளை இவர் மேற்கொண்டதையும், எப்போதும் தோழர் இ.பாலானந்தனுடன் துணை யாக இருந்ததையும் முதலமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார்.