கோட்டயம் “காவல்துறையில் உள்ள சில புழுக்க ளால் ஒட்டுமொத்த படையும் அவமானமாகி வருவதா கவும், காவல் துறைக்கு இப்படிப் பட்டவர்கள் தேவையில்லை என்றும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
கேரளம் மாநிலம் கோட்டய த்தில் கேரள போலீஸ் சங்கத்தின் மாநில மாநாட்டை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தொ டங்கி வைத்தார். மாநாட்டை துவங்கி வைத்து பினராயி விஜயன் பேசுகையில்,”கடமையை புறக்க ணிக்கும் அதிகாரிகள் எவ்வகையி லும் படையில் தொடர அனுமதிக் கப்பட மாட்டார்கள். அவர்கள் கண் டிப்பாக பணி நீக்கம் செய்யப்படு வார்கள். எந்தச் சூழ்நிலையிலும் ஒழுக்கத்துடன் செயல்படுவதுதான் காவல்துறை. முன்பெல்லாம் கேரளத்தில் அவ்வப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது. ஆனால், இன்று எங்கும் அப்படி ஒரு நிலை இல்லை. இதில் காவல்துறைக்கு முக்கிய பங்கு உள்ளது. சமூகத்தில் நடக்கும் பல வன்முறைச் செயல்களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் காவல்துறையால் முடிகிறது. எத்தனை நிரூபிக்க முடியாத குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தல்களை ஒழிப்பதற்கு முன்மாதிரியான தலையீடுகளை காவல்துறை நடத் தியுள்ளது” என அவர் கூறினார்.
ஏடிஜிபி எம்.ஆர்.அஜித் குமார் மீதான குற்றச்சாட்டுகளில் நீதி விசாரணை தேவை
பி.வி.அன்வர் எம்எல்ஏ வலியுறுத்தல்
திருவனந்தபுரம் சோலார் வழக்கை மூடி மறைக்கும் நோக் கில் செயல்பட்ட ஏ.டி.ஜி.பி எம்.ஆர்.அஜித்குமார் மீதான குற்றச்சாட்டுகளில் நீதி விசாரணை தேவை என எல்டிஎப் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ பி.வி. அன்வர் (நிலம்புர்) வலியுறுத்தி யுள்ளார். ஏடிஜிபி எம்.ஆர்.அஜித் குமார் சோலார் வழக்கில் தலை யிட்டது குறித்த தகவல் அடங்கிய காவல் அதிகாரியின் குரல் பதிவை பி.வி.அன்வர் எம்எல்ஏ வெளியிட்ட நிலையில், செவ்வா யன்று முதல்வர் பினராயி விஜய னிடம் நேரடியாக இந்த விவகா ரம் தொடர்பாக பி.வி.அன்வர் எம்எல்ஏ புகாரும் அளித்துள்ளார். அதன்பிறகு நடைபெற்ற செய்தி யாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து பி.வி.அன்வர் எம்எல்ஏ பேசுகை யில்,”ஏடிஜிபி எம்.ஆர்.அஜித் குமார் ஒரு கொலைகாரர். தங்கக் கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளது. சோலார் வழக்கில் சிக்கியவர்க ளைக் காப்பாற்ற எம்.ஆர்.அஜித் குமார் நேரடியாக தலையிட்டுள் ளார். ஏடிஜிபி மற்றும் அவரது குழுவை விசாரிக்கிறவர்களைக் கட்டுப்படுத்தும் அணுகுமுறை உள்ளது. இதனால் ஏடிஜிபி எம். ஆர்.அஜித் குமார் மீதான குற்றச்சாட்டுகளில் நீதி விசா ரணை தேவை. காவல்துறையில் உள்ள லாபியை உடைக்க வேண் டும். எம்.ஆர்.அஜித்குமாரும், சுஜித் தஜாஸும் சிறைக்கு செல் வார்கள் என்ற நம்பிக்கை உள் ளது” என அவர் கூறியுள்ளார்.