states

img

தொழிலாளர் வர்க்க மூத்த தலைவர் எம்.எம்.லாரன்ஸ் விடைபெற்றார் துணிச்சலான புரட்சியாளர்: பினராயி விஜயன் புகழாரம்

கொச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வரும், தொழிலாளர் வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவரு மான  தோழர் எம்.எம்.லாரன்ஸ் (95 வயது) ஞாயிறன்று மறைந்தார்.

துப்புரவு தொழிலாளிகள் முதல் தொழில்துறை தொழிலாளர்கள் வரை ஒருங்கிணைத்து, தொழி லாளர்களது உரிமைகளைப் பெற வழிவகுத்த அன்புக்குரிய தலைவர் எம்.எம்.லாரன்ஸின் உடல் கொச்சி  மெடிக்கல் டிரஸ்ட் மருத்துவமனை  பிணவறையில் இருந்து திங்க ளன்று காலை காந்திநகரில் உள்ள  வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

காந்திநகர் இல்லத்தில் காலை 8 முதல் 8.30 வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் காலை 9 மணிக்கு சிபிஎம் மாவட்டக் குழு அலுவலகமான லெனின் மையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதைத் தொ டர்ந்து மாலை 4 மணி வரை டவுன் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் களமசேரி (எர்ணாகுளம்) மருத்து வக் கல்லூரி மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு கேரள முதல் வர் பினராயி விஜயன், பி.ராஜீவ் உள்ளிட்ட அமைச்சர்கள், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர்கள் எம்.ஏ.பேபி, ஏ.விஜயராக வன், மத்தியக்குழு உறுப்பினர்கள் இ.பி.ஜெயராஜன், தாமஸ் ஐசக், மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந் தன், எல்டிஎப் கன்வீனர் டி.கே.ராம கிருஷ்ணன், திரைக் கலைஞர்கள் மம்முட்டி, பேராசிரியர் எம்.கே. ஷானு உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். சிஐடியு மூத்த தலைவர்கள் ஏ.கே.பத்ம நாபன், டி.கே.ரங்கராஜன் உள் ளிட்டோர் தோழர் எம்.எம். லாரன்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரி வித்துள்ளனர்.

துணிச்சலான புரட்சியாளர் : முதல்வர் புகழாரம்

அஞ்சலி செலுத்திய பின்பு கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில்,”எம்.எம்.லாரன்ஸ் ஒரு துணிச்சலான புரட்சியாளர், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வலு வான தலைவர்களில் ஒருவர் ஆவார். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரிக ளுக்கும், நமது ஒட்டுமொத்த ஜன நாயக இயக்கத்திற்கும் பேரி ழப்பாகும். ஜனநாயக மதச்சார்பற்ற விழுமியங்களுக்காக ஆவேசமான போராட்டங்களை முன்னின்று நடத்திய வரலாற்றைக் கொண்ட எம்.எம்.லாரன்ஸ் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் போராடுவ தையே வாழ்க்கையாக கொண்ட வர். ஒரு முக்கியமான கட்டத்தில் இடதுசாரி ஜனநாயக இயக்கத்தை முன்னுதாரணமாக வழிநடத்திய வர் என்பதையும் குறிப்பிட வேண் டும். எம்.எம்.லாரன்ஸ் பத்தாண்டுக ளுக்கும் மேலாக இடதுசாரி ஜன நாயக முன்னணியின் ஒருங்கி ணைப்பாளராக இருந்தவர். 

அவர் தொடர்ந்து முன்னணி யின் அடித்தளத்தை விரிவுபடுத்தி எல்டிஎப்-ஐ வலுப்படுத்தினார். பத்திரி கைத் துறையிலும் பணியாற்றி யுள்ளார். அவரது வாழ்க்கை தொழிற் சங்க நடவடிக்கையின் நீண்ட வர லாற்றையும் கொண்டுள்ளது. சிஐடியு எர்ணாகுளம் மாவட்டக் குழுவின் முதல் செயலாளராக இருந்த லாரன்ஸ், அகில இந்தியச் செயலாளராக உயர்ந்தார். அந்த தொழிற்சங்க வாழ்வில் சமரச மற்ற போராட்டங்கள் மூலம் தொழி லாளி வர்க்க நலன்களை முன்னெ டுத்துச் செல்வதற்கான உதாரணங் கள் உள்ளன. அதையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். 75 ஆண்டுக ளுக்கும் மேலாக கட்சி உறுப்பின ராக இருந்து, அடிமட்டத்திலும், உயர் மட்டத்திலும் பணிபுரிந்தவர். எம்.எம்.லாரன்ஸின் அரசியல் வாழ்க்கையில் குறிப்பிட வேண்டிய மிக முக்கியமான அம்சம் அவர் கடைப்பிடித்த கட்சி ஒழுக்கத்தின்  நேர்மை. கட்சி நிலைப்பாட்டைக் காட்டிலும் தனது நிலைப்பாடு சரியா னது என்று அவர் ஒருபோதும் வாதிட்டதில்லை. லாரன்ஸ் தனது சொந்த வாழ்க்கையில், கட்சி உறுப் பினர்கள் கட்சி முடிவுகளுக்கு இணக்கமாக இருக்க வேண்டிய தன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். ஒரு கட்டத்தில் கட்சி யின் மத்திய குழுவில் இருந்து விடு விக்கப்பட்டு எர்ணாகுளம் ஏரியா கமிட்டியில் சேர்க்கப்பட்டார். முதல் நாள் வரை மத்திய கமிட்டியிலும், மாநிலச் செயலகத்திலும் பணி யாற்றிய அவர்,  உடனே ஏரியா  கமிட்டியில் முறையான ஒழுக்கத்து டன் பணியாற்றினார். எந்தவொரு கட்சி உறுப்பினரும் அந்த ஒழுக்க உணர்வை பின்பற்ற வேண்டும்” என அவர் கூறினார்.

சங்பரிவார் குறுக்கீடு முறியடிப்பு    

எம்.எம்.லாரன்ஸ் தனது உடலை மருத்துவக்கல்லூரி மாண வர்களின் ஆய்வுக்கு ஒப்படைக்க விருப்பம் தெரிவித்தி ருந்தார். அதன் அடிப்படையில் அவரது மகன் எம்.எல்.சஜீவன் கட்சி தலைவர்களுடன் இணைந்து உடலை ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆனால் எம்.எம்.லாரன்ஸின் மகள் ஆஷா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சங்பரிவார் வழக்கறிஞரான கிருஷ்ணராஜ் மூலம் நீதிமன்றத்தை அணுகினார். உடலை மருத்துவமனைக்கு ஒப்ப டைக்க தடை ஏதும் இல்லை எனவும், உடலை பெற்றுக்கொண்டு குடும்ப உறுப்பினர்களின் கருத்தறிந்து மருத்துவக்கல்லூரி நிர்வாகம் முடி வெடுக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி திட்டமிட்டபடி  அரசு மரியாதைக்குப்பின் உடல் மருத்துவமனையில் ஒப்படைக்கப் பட்டது. குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்துக்கு மேல் கட்சிக்கு தனிப் பட்ட விருப்பம் ஏதும் இல்லை என சிபிஎம் கொச்சி செயலாளர் மோகனன் தெரிவித்தார்.