ஐக்கிய அரபு ஜனாதிபதி மறைவிற்கு கேரள முதல்வர் பினராயி தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் கலீஃபா பின் சையத் அல் நஹ்யான் காலமானார் அவருக்கு வயது 73.
2004ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரக தலைவராக இருந்து வந்த ஷேக் கலீஃபா பின் சையத் இன்று உடல் நலக்குறைவால் காலமானார் அவர் மறைவையடுத்து, அந்நாட்டில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சகங்கள், அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பினராயி விஜயன் தனது ட்விட்டர் பதிவில்,
கேரளாவுடன் எப்போதும் நல்லுறவை பேணி வரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயத் அல் நஹ்யான் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
அவர் எமிரேட்ஸை நவீனமயமாக்குவதில் முக்கிய பங்கு வகித்த ஒரு தொலைநோக்கு தலைவர். அவரது பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூரப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.