திருவனந்தபுரம், பிப்.27- இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக்கு தொடக்கம் முதலே உதவி செய்து வரும் மாநிலம் என்ற பெருமை கேரளத்துக்கு கிடைத்துள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
திருவனந்தபுரம் அருகில் தும்பாவில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (விஎஸ்எஸ்சி) பிரதமர் நரேந்திர மோடியுடன் பங்கேற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பினராயி விஜயன் மேலும் கூறியதாவது:
இப்படி ஒரு விழாவில் நிற்கும் போது, ஆறுபது ஆண்டுகளுக்கு முன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி குறித்த யோசனை யுடன் கேரள அரசை அணுகிய டாக்டர் விக்ரம் சாராபாயை நினைவுகூராமல் இருக்க முடி யாது. அதே சமயம், அதற்கு இடம் கொடுத்த தும்பா என்ற இந்த சிறிய கிராம மக்களையும், அவர்களுக்கு தைரியமான தலைமையை வழங்கிய அருட்தந்தை பெரேரா போன்ற திருச்சபை தலைவர்களையும் நன்றியுடன் நினைவுகூராமல் இருக்க முடியாது. இங்கிருந்து இடம்பெயர்வது தங்களின் வாழ்வாதாரத்திற்கு சவாலாக இருக்கும் என்பதை அறிந்த அன்றைய உள்ளூர் மக்கள் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முழு ஆதரவை வழங்கினர்.
டிரிசோனிக் காற்று சுரங்கப்பாதை
இன்று தொடங்கப்படும் அமைப்புகளில் ஒன்று இந்த மையத்தில் உள்ளது. டிரிசோனிக் காற்று சுரங்கப்பாதை. இந்த நவீன வசதி இந்தியாவிலேயே முதல் முறை யாகும். ஒலியை விட நான்கு மடங்கு வேகத்தில் காற்றை நகர்த்தும் திறன் கொண்ட இயந்திரம் இது. ராக்கெட்டுகளை ஏவுவது தொடர்பான பரிசோதனைகளை இதன் மூலம் மேற்கொள்ளலாம். இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் தொடக்க நிலையிலேயே பங்களித்து வரும் கேரளம், நமது விண்வெளி ஆராய்ச்சியின் வேகத்தை அதிகரித்து தரத்தை உயர்த்தும் அமைப்பைத் தொடங்குவது முழு நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் விசயம்.
கேரளத்தின் சிறந்த ஆதரவு
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கேரளத்தின் சிறந்த ஆதரவுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
மேக் இன் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக கேரளத்தில் தயாரிக்கப் பட்டது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
சந்திரயான் 3 மிஷன் மற்றும் ஆதித்யா மிஷன் ஆகியவற்றில் கேரளத்தைச் சேர்ந்த பல தொழில்துறை நிறுவனங்களை, குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களை யும் சிறு நிறுவனங்களையும் ஈடுபடுத்தி யுள்ளன. ஆக, கேரளத்தின் தொழில் நிறுவனங்கள், குறிப்பாக நமது பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியாவின் நற்பெயரை வானளாவ உயர்த்தி வரு கின்றன.
நாட்டின் முன்னேற்றத்திற்கு பொதுத் துறை மிகவும் அவசியம் என்பதை இது காட்டுகிறது. பொதுத்துறை நிறுவனங் களைப் பாதுகாத்து வலுப்படுத்த வேண்டிய தன் அவசியத்தையும் சுட்டிக் காட்டுகிறது.
ககன்யானுக்கு வாழ்த்துக்கள்
மனிதர்களை ஏற்றிச் செல்லும் ககன்யான் என்ற விண்வெளி ஆய்வை உருவாக்கும் பணியில் நாடு ஈடுபட்டுள்ள கட்டம் இது வாகும். விஎஸ்எஸ்சியில் உள்ள டிரிசோ னிக் காற்று சுரங்கப்பாதை மகேந்திர கிரியில் உள்ள செமி கிரையோஜெனிக் ஒருங்கிணை ந்த எஞ்சின், ஸ்டேஜ் டெஸ்ட் வசதி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்பு வசதி ஆகியவை இதற்கு முக்கிய சொத்தாக இருக்கும். இந்த மூன்று அமைப்புகளும் மூன்று மாநிலங்களில் உள்ளன. ஆனால் இவை நாட்டின் பொது வான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எனவே, தேசத்தின் முன்னேற்றத்திற்கு மாநிலங்கள் ஆற்றி வரும் பெரும் பங்களிப்பிற்கு இந்த தொடக்க நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு.
இந்த மூன்று அமைப்புகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த மூன்றையும் நன வாக்க கடுமையாக உழைத்த விஞ்ஞானி கள், அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் களுக்கு வணக்கம்.
விஎஸ்எஸ்சி மற்றும் ஐஎஸ்ஆர்ஓ ஆகியவை இந்திய விண்வெளி ஆராய்ச்சியை மேலும் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லட்டும். ககன்யானுக்கு ஆல் தி பெஸ்ட். உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள் - என்றார் முதல்வர்.