ஆலப்புழா, டிச.16- மீனவர்கள் மற்றும் கடலோர மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது அரசின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும். காடுகளின் உரிமை பழங்குடியினருக்கும் கடல் உரிமை மீனவர்களுக்கும் உரியது என்பதே கேரள அரசின் நிலைப்பாடு என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
புதிய கேரளம் அரங்கத்தின் ஒரு பகுதியாக சனியன்று (டிச.16) காயம்குளத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் மேலும் கூறியதாவது: 590 கிமீ நீளம் கடற்கரை யை கொண்ட மாநிலம் கேரளம். பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் கரையோர மக்கள் ஏற்கனவே பெரும் அழுத்தத்தில் உள்ளனர். இதனுடன், ஒன்றிய அரசு செயல்படுத்திவரும் நீலப் பொருளாதாரத்தால் அறிவியல் பூர்வமான வளர்ச்சியும் இல்லாதபோது நிலைமை மேலும் மோசமாகும் என்ற அச்சம் பொதுவானதாக உள்ளது. கடலை மீனவர்களிடம் இருந்து அந்நியப்படுத்தி பெரும் கார்ப்ப ரேட்டுகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு நீலப் பொருளாதாரம் வழங்குவதாக ஏற்கனவே கடும் விமர்சனம் எழுந்துள்ளது. காடுகளின் உரிமை பழங்குடியினருக்கு உள்ளது போல் கடல் உரிமை மீனவர்களுக்கும் உரியது என்பது மாநில அரசின் கொள்கை.
மீனவர்களுக்கு 12,104 வீடுகள்
கடற்கரையில் உள்ள மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று வீட்டுவசதி. அதைத் தீர்க்க அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் மீனவர்களுக்கு 12,104 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மண்ணும்புரத்தில் 204 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. முட்டத்தரயில் 400 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணி பாதி அளவு நிறை வடைந்துள்ளது.
பொன்னானி (100), மலப்புரம் மாவட்டத்தில் உன்னியால் (16), கோழிக்கோடு மாவட்டத்தில் வெஸ்ட்ஹில் (80), காசர்கோடு மாவட்டத்தில் கோய்ப்பாடி (144) என 944 குடியிருப்புகள் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் வலியத்துறை, வேலி ஆகிய இடங்களில் 2.37 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு 192 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி பெறுவதற்கான பணிகள் நடை பெற்று வருகின்றன.
பாரம்பரிய மீனவர்களுக்கு அதிகாரம்
பாரம்பரிய மீனவர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில், 10 பேர் கொண்ட குழுவிற்கு தலா ரூ.1.56 கோடி மதிப்பில் 10 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதில் 6 படகுகள் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள நான்கு பேருக்கு இந்த மாதமே படகுகள் ஒப்படைக்கப்படும். 320 எப். ஆர். பி. மீன்பிடி அலகுகள் விநியோகிக்கப்பட்டன. இந்த ஆண்டு மேலும் 100 யூனிட்கள் வழங்கப்படும்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வேலை இழப்பை ஈடுகட்ட நாட்டிலேயே கேரளா மட்டுமே நிதியுதவி அளித்துள்ளது. தற்போது இதற்காக சுமார் ரூ.50 கோடி செலவிடப்பட்டுள்ளது. வானிலை எச்சரிக்கை மற்றும் கோவிட் காரணமாக வேலை நாட்களை இழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.180 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய மீனவர்களுக்கு இயந்திரம் வாங்குவதற்கு தலா 30 ஆயிரம் ரூபாயும், வலைகள் வாங்குவதற்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. மண்ணெண்ணெய் தட்டுப்பாடு மற்றும் அதன் விலை உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி போன்ற மலிவான மற்றும் லாபகரமான எரிபொருளுக்கு மாறுவதற்கு அரசாங்கம் நிதி உதவி வழங்கும். பாரம்பரிய மீன்பிடி கப்பல்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. பிரீமியத்தில் 90 சதவிகிதம் அரசாங் கத்தால் நிதியளிக்கப்படுகிறது.
மீன் உற்பத்தியில் இரண்டாம் இடம்
கடல் மீன்பிடி சட்டம் காலத்துக்கேற்ற திருத்தம் செய்தும் அறி வியல்ரீதியாக மீன்பிடிப்பதை உறுதி செய்ததன் காரணமாக, கேரளம் 6.93 லட்சம் மெட்ரிக் டன் கடல் மீன் உற்பத்தியை அடைந்து நாட்டிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இடைத்தரகர்களின் சுரண்டலில் இருந்து மீனவர்களை பாது காக்க மீன் பிடித்தல், விற்பனை மற்றும் தர மேலாண்மை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கான விதிகளை வகுக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மீன்பிடித் துறைமுகங்களின் மேலாண்மை மற்றும் பரா மரிப்புக்காக மாநிலத்தின் 21 முக்கிய துறைமுகங்களில் துறைமுக மேலாண்மைச் சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மீன் சந்தைப்படுத்தும் பெண் தொழிலாளர்களுக்கு இலவச பயண ஏற்பாடு செய்ய கே. எஸ். ஆர். டி. சி.யுடன் இணைந்து சமுத்திரா திட்டம் செயல்படுத்தப்பட்டது. மீனவர்களுக்கான விபத்து காப்பீடு ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து மீனவர் கள் மற்றும் அதைச் சார்ந்த தொழிலாளர்கள் காப்பீட்டின் கீழ் பயனாளிகளாக உள்ளனர்.
மீன்வளப் பல்கலைக்கழகம்
மீனவ குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீட்டுடன் நாட்டிலேயே முதல் மீன்வளப் பல்கலைக்கழ கத்தை கேரளம் தொடங்கியுள்ளது. பையனூரில் மீன்வளப் பல்க லைக்கழக மையம் தொடங்கப்பட்டது. வித்யாதீரம் திட்டத்தின் மூலம், மீனவர்களின் குழந்தைகளுக்கு மருத்துவம்/சிவில் சர்வீஸ்/வங்கி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஏற்கனவே 75 டாக்டர்கள் திறமேக் கல்லில் உருவாக்கப்பட்டுள்ளனர்.
பெற்றோரை இழந்த மீனவர்களின் குழந்தைகளை தத்தெ டுத்து அவர்களின் கல்விச் செலவுகளை அரசு ஏற்றுள்ளது. கட லோரப் பகுதிகள் அனைத்திலும் மக்கள் ஆர்வத்துடன் புதிய கேரளம் அரங்கத்திற்கு வர அரசின் இந்த அணுகுமுறையும் காரணம் என முதலமைச்சர் கூறினார்.