பாஜகவுக்கு மிக நெருக் கமானவரும், பிரபல சுரங்க தொழிலதிபரு மான ஜனார்த்தன ரெட்டி கடந்த 2023 சட்டமன்ற தேர்தலில் கல் யாண ராஜ்ய பிரகதி பக்ஷா (கேஆர் பிபி) கட்சியை ஆரம்பித்து வட கிழக்கு கர்நாடகாவின் பெரும் பாலான (42) தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு, தான் போட்டியிட்ட கங்காவதி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றார்.
ஒரே ஒரு தொகுதியில் வென் றாலும் 12-க்கும் மேற்பட்ட தொகு திகளில் பாஜகவிற்கு நிகராக வாக் குகளை அள்ளிக் குவித்தது ஜனார்த்தன ரெட்டியின் கேஆர் பிபி கட்சி. வரவிருக்கும் மக்கள வைத் தேர்தலிலும் ஜனார்த்தன ரெட்டியின் கேஆர்பிபி கட்சி 10-க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதி களில் ஆதிக்கம் செலுத்த வாய்ப் புள்ளதாக கருத்துக்கணிப்பில் தக வல் வெளியாகிய நிலையில், தங்க ளது வாக்கு வங்கிக்கு சேதாரம் ஏற் படலாம் என அஞ்சி கேஆர்பிபி கட்சியை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தீவிரமாக களமிறங்கியது.
அமலாக்கத்துறை “ஆக்சன்”
இதன் முதல்படியாக ஜனார்த் தன ரெட்டியின் ‘மனதில் இடம் பிடிக்கும்’ வகையில் 2 வாரத்திற்கு முன்பு வடகிழக்கு கர்நாடகாவில் வலுவான தலைவராக உருவெ டுத்துள்ள காங்கிரசின் பரத் ரெட்டி யை (பெல்லாரி எம்எல்ஏ) குறி வைத்து அமலாக்கத்துறை மூலம் நெருக்கடி கொடுத்தது மோடி அரசு. இதனால் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் கேஆர் பிபி கட்சி இணையும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், ஜனார்த் தன ரெட்டி திடீரென காங்கிரஸ் பக்கம் சாய்ந்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்த ராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோரை சந் தித்து, வரவிருக்கும் மாநிலங்க ளவை தேர்தலில் காங்கிரஸ் வேட் பாளர்களுக்கு ஆதரவு அளிப்ப தாக ஜனார்த்தன ரெட்டி அறி வித்துள்ளார். மேலும் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் உடன் கைகோர்த்து “இந்தியா” கூட்டணியில் ஜனார்த்தன ரெட்டி யின் கேஆர்பிபி கட்சி தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளது என தக வல் வெளியாகியுள்ளது. கேஆர் பிபி காங்கிரஸ் உடன் கைகோர்த் துள்ளதால் பாஜக கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது.
இன்று மாநிலங்களவை தேர்தல்
கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை இடங் களுக்கு செவ்வாயன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒரு மாநி லங்களவை இடத்தில் வெல்ல 45 வாக்குகள் தேவை என்ற நிலையில், 135 எம்எல்ஏக்களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி 3 இடங்களில் வெல்ல பெரும்பான்மை உள்ளது. மீதமுள்ள ஒரு இடத்தை 66 எம்எல்ஏக் களை கொண்ட பாஜக கைப்பற்ற வாய்ப்புள்ள நிலையில், பாஜகவிற்கு மீத முள்ள 21 வாக்குகளின் ஆதரவுடன் 19 எம்எல்ஏக்களை கொண்ட ஜேடிஎஸ் கட்சியும் 5-ஆவது வேட்பாளரை களமிறக்கியதால், செவ்வாயன்று வாக்குப்பதிவு மூலம் 4 மாநிலங்களவை இடங்கள் நிரப்பப்பட உள்ளது. செவ்வாயன்று மாலையிலேயே வாக்கு எண்ணிக்கை நடைபெறு கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.