states

img

கே.என்.மோடி கல்வி நிறுவனங்களின் தரவுகளைத் திருடிய ஹேக்கர்கள்!

உத்தரப் பிரதேசத்தின் மோடி நகரில் உள்ள கே.என்.மோடி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களின் தரவுகளை ஹேக்கர்கள் திருடியதாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மோடி நகரில் உள்ள கே.என்.மோடி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களின் கணினிகளில் பதிவு செய்யப்பட்டு இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த தரவுகளை ஹேக்கர்கள் திருடி அழித்ததாகவும், தரவுகளைத் திரும்பப் பெற ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் கிரிப்டோகரன்சியில் வழங்கக் கோரி மிரட்டல் விடுத்ததாகவும்,  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, அப்பகுதி போலீசார், பெயர் தெரியாத 2 நபர்கள் மீது பிரிவு 507-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

;