ஆந்திர மறுசீரமைப்புச் சட்டம் 2014இன் படி மாநிலத்திற்கு வரவேண்டிய திட்டங்கள் மற்றும் நிதியைப் பாதுகாக்கவும், நிலுவையில் உள்ள நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றவும், இடம்பெயர்ந்த ஏராளமான மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் உரிய முன்னுரிமை அளிக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வி.சீனிவாச ராவ், மத்தியக் குழு உறுப்பினர் எம்.ஏ.கபூர் ஆகியோர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.