ஹரியானா மாநிலம் குர்கான் அருகே கழிவுநீர் தொட்டியிலிருந்து விஷவாயு தாக்கி 2 பேர் பலியாகி உள்ளனர்.
ஹரியானா மாநிலம் குர்கான் அருகே உள்ள முகமதுப்பூர் ஜர்ஷா கிராமத்தில், துப்புரவுப் பணியாளரான திலிப் (45 வயது), டெய்லரான முகமது சகாபுதின் (29) ஆகியோர் ஒரு வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றுள்ளனர். அப்போது, கழிவுநீர் தொட்டியிலிருந்து விஷவாயு தாக்கியதில், இருவரும் மயங்கி விழுந்தனர். மயக்கமடைந்தவர்களை மருந்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து, திலிப்பின் மகன் சோரோவ் வீட்டு உரிமையாளர் பீம் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பீம் மீது வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகின்றனர்.