states

img

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற லவ்லினா அசாமில் டிஎஸ்பியாக பதவியேற்பு  

ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹெய்ன் அசாம் காவல்துறை துணை கண்காணிப்பாளராக இன்று பதவியேற்று கொண்டார்.

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் 69 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு வெண்கலப் பதக்கம் வென்றவர் லவ்லினா போர்கோஹெய்ன்.  இவருக்கு அசாம் முதல்வர் ஹிமான்ட்டா பிஸ்வா சர்மா ரூ.1 கோடி பரிசுத் தொகையும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவியும் இன்று வழங்கினார். அதன்பிறகு காவல்துறை துணை கண்காணிப்பாளராக பதவியேற்றுக் கொண்டார்.    

இதுகுறித்து முதல்வர் கூறியதாவது, அசாமுக்கு முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று வந்த லவ்லினாவுக்கு பாரிஸ் ஒலிம்பிக் 2024 வரை மாதந்தோறும் ரூ.1 லட்சம் உதவித் தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அவர் பாரிஸில் தங்கம் வெல்வதை கனவாக கெண்டுள்ளார். மேலும் குவாஹட்டியில் ஒரு சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும். லவ்லினாவின் குத்துச்சண்டை பயணத்தில் அங்கமாக இருந்த பயிற்சியாளர்கள் பிரஷந்தா தாஸ், பதும் பரௌவா, சந்தியா குருங் மற்றும்  ரஃபேல் கமவஸ்கா ஆகியோருக்கு அசாம் மக்கள் நன்றியின் வெளிப்பாடாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும். 

அதனைதொடர்ந்து விழாவில் பேசிய லவ்லினா போர்கோஹெய்ன், இந்த நாள் தனது வாழ்க்கையில் பெருமைமிக்க மற்றும் மறக்கமுடியாத நாளாக இருக்கும், மேலும் அசாம் மற்றும் அதன் குடிமக்களுக்கு என்னால் இயன்ற சேவையை செய்வேன் என்று கூறினார்.