கவுகாத்தி பாஜக ஆளும் மாநி லங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதிகரித்து வரும் நிலை யில், அசாம் மாநிலத்தில் 14 வயது சிறுமி கும்பல் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
அசாமில் நாகோன் மாவட்டத் தின் திங் பகுதியில் வியாழனன்று இரவு டியூசன் சென்ற 14 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் கண்டறிவ தற்குள் பெற்றோர்கள் - உற வினர்கள் டியூசன் செண்டருக்கு அருகே உள்ள குளத்தின் கரை யில் மயக்க நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர். மயக்கம் தெளிந்த சிறுமி தன்னை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த தாக கூறினார். சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த 3 பேரில் ஒருவரை போலீசார் வெள்ளியன்று கைது செய்தனர்.
குற்றவாளி தற்கொலை?
சிறுமியை பாலியல் வன்கொ டுமை செய்யப்பட்ட குளக்கரை பக்கம் இளைஞரை அழைத்துச் சென்ற பொழுது கைவிலங்கோடு அவர் குளத்தில் குதித்து உயிரி ழந்ததாக நாகோன் மாவட்ட போலீ சார் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இளைஞர் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.