science

img

கோமியம் மனிதர்களின் உடல்நலத்திற்கு உகந்ததல்ல

கோமியத்தை நேரடியாக உட்கொள்வது மனித உடலுக்கு உகந்ததல்ல. பசு மர்றும் எருமையின் கோமியத்தில் 14 வகையான கேடு விளிவிக்கும் பாக்டிரியாக்கள் இருப்பதாக இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை
   இந்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் போஜ் ராஜ் சிங் தலைமயிலான மாணவர்கள் குழு பசுவின் சிறுநீரகத்தை மனிதர்கள் உட்கொள்வது பற்றிய விரிவான ஆய்வு ஒன்ரினை நடத்தினர். 
இந்த ஆய்வில் கோமியம் என்று அழைக்கப்படும் பசுவின் சிறுநீர் மர்றும் எருமையின் சிறுநீரை மனிதர்கள் நேரடியாக உட்கொள்வது மனித உடலுக்கு உகந்ததல்ல என்றும் அதில் 14 வகையான மனித உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய பாக்டிரியாக்கள் உள்ளது இவை பல வகையான தொற்று வியாதிகளை ஏற்படுத்தும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 
தொற்றுநோயியல் துறையின் தலைவர் போஜ் ராஜ் சிங் கூறுகையில், "பசு, எருமைகளிடம் இருந்து மொத்தம் 73 சிறுநீர் மாதிரிகளை எடுத்து நாங்கள் சோதனை செய்தோம். அதேநேரம் பசுவுடன் ஒப்பிடுகையில் எருமையின் சிறுநீரில் ஆன்டிபாக்டீரியாக்கள் இருக்கிறது. எருமை சிறுநீரில் S Epidermidis, ERhapontici இருப்பதால் அது சற்று குறைவான வீரியம் கொண்டதாக இருக்கிறது. என கூரினார். இந்த ஆய்வு முடிவுகள் ரிசர்ச்கேட் எனப்படும் ஆராய்ச்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.