science

img

மருத்துவக்கதிர் - மரு., தெ.வெண்மணி எம்.டி.

மாதவிடாய் குறித்த கல்வி அறிவியல் பூர்வமான புரிதல் ஒரு பெண்ணின் வாழ்வியலில் அனைத்து தளங்களையும் மேம்படுத்துகிறது. இது புத்தம் புதிய வழிகளில் தங்களைக் கவனித்துக் கொள்ளும் அதிகாரத்தை பெண்களுக்கு அளிப்பதுடன் அவர்களின் சுயமரியாதையை அதிகரிக்கவும்-உயர்த்தவும் நிச்சயம் உதவுகிறது. சரியாகக் கூறினால் அவளது சிந்தனையில் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான மனோ திடத்தை, சுதந்திரத்தை அளிக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் அவள் எங்கிருந்தாலும் எப்படிப்பட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் தனது மாதவிடாயை சுகாதாரமான முறையில் பராமரிப்பதற்குரிய தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் நிர்வகிக்கக்கூடிய தனிச்சுழலை உருவாக்கிக் கொள்ளும் சுயஆளுமையை அவள்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.