வாஷிங்டன், டிச.22- செவ்வாய்க் கிரகத்தின் உட்புறத்தை நான்கு ஆண்டுகள் ஆய்வு செய்த ‘இன்சைட்’ லேண்டர் நாசாவிடமிருந்து புதன்கிழமை விடைபெற்றது. செவ்வாய்க் கிரகத்தில் நிலநடுக்கம் உள்ளிட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக விண்கலம் ஒன்றை முதன்முறையாக அனுப்ப அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு முடிவுசெய்தது. இதன்படி, இன்சைட் என்ற விண்கலம் கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செவ் வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டது.
அது கடந்த நான்காண்டுகளாக பல்வேறு புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது. இதன் மூலம், செவ்வாய்க் கிரகத்தின் மையப்பகுதி திரவத்தாலானது என்பதை விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்த முடிந்தது. செவ்வாயின் மேற்பரப்பின் தடிமனையும் தீர்மானிக்க முடிந்தது. இதன் மூலம் செவ்வாயின் மேற்பரப்பு குறைவான அடர்த்தியைக்கொண்டது. அது மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது என்ற முடிவுக்கும் வர முடிந்தது. சில விண்கற்களின் மோதல் ஏற்பட்டதால் நிகழ்ந்த 1,319 நில நடுக்கங்களை (அதிர்வுகளை) இன்சைட் பதிவு செய்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக செவ்வாய்க் கிரகத்தில் இன்சைட் ஆய்வுப் பணியை மேற்கொண்டது. கடைசியாக அது டிசம்பர்15-ஆம் தேதி பூமியுடன் தொடர்பு கொண்டது.
அமெரிக்க விண்வெளி நிறு வனத்தால் இன்சைட் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இன்சைட் லேண்டரில் சூரிய சக்தியில் இயங்கும் பேட்டரிகள் சேமிக்கும் ஆற்றலை இழந்திருக்கலாம் என்ற முடிவுக்கு நாசா வந்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் முதன்மை ஆய்வாளர் புரூஸ் பானெர்ட் கூறுகை யில், “இன்சைட் கடந்த நான்கு ஆண்டு களாக செவ்வாய் கிரகத்தில் எங்களின் நண்பராகவும் சக ஊழியராகவும் இருந்து பணியாற்றியது. அதனிட மிருந்து நாங்கள் விடைபெறுவதை நினைத்தால் கஷ்டமாக உள்ளது. ஆனால், அதன் பணிகள் பயனுள்ள தாக இருந்தது” என்று கூறியுள்ளார். இது குறித்து நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்சைட் ஓய்வு பெறலாம். ஆனால் செவ்வாய் கிரகத்தின் ஆழமான உட்புறத்தில் இருந்து இன்சைட் கண்டறிந்த தரவுகள் நிலைத்து நிற்கும்” எனத் தெரிவித்துள்ளது.