science

img

நிலவில் 100 மீட்டர் தூரத்தை கடந்த ரோவர்!

நிலவில் 100 மீட்டர் தூரத்தை கடந்து பிரக்யான் ரோவர் பயணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் மேற்பரப்பில் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி தரையிறங்கிய சந்திரயான் 3 லேண்டில் இருந்து பிரிந்த ரோவர் நிலவில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. நிலவில் சிலிகான், இரும்பு, ஆக்ஸிஜன், அலுமினியம், கால்சியம், குரோமியம், டைட்டானியம், கந்தகம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை ரோவர் கண்டறிந்துள்ளது. இதை தொடர்ந்து, நிலவில் ஏற்பட்ட அதிர்வுகளை  விக்ரம் லேண்டர் பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், நிலவில் 100 மீட்டர் தூரத்தை கடந்து பிரக்யான் ரோவர் பயணித்து வருவதாக இஸ்ரோ இன்று தெரிவித்துள்ளது.