science

img

2020-ல் 10க்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தகவல்

வரும் 2020-ஆம் ஆண்டில், ஆதித்யா-எல்1, ககன்யான் உட்பட 10க்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தனர்.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு அளித்த பேட்டியில், “வரும் 2020-ஆம் ஆண்டில், 10க்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், மேம்படுத்தப்பட்ட தொலை தொடர்பு செயற்கைகோள்களான ஜிசாட்1, ஜிசாட்-12ஆர், கூடுதலாக, பூமியின் கண்காணிப்பு செயற்கைகோள்கள் ரீசாட்- 2 பிஆர்-2 மற்றும் கண்காணிப்புக்கான ‘மைக்ரோசாட்’ ஆகியவை அடங்கும். சந்திரயான்-3 புத்தாண்டில் விண்ணில் ஏவப்படுகிறது. சந்திரயான்-3 திட்டத்தில் லேண்டர், ரோவர் மற்றும் கூடுதல் எரிபொருள் ஏற்றிச் செல்ல ஒரு பாகமும் இருக்கும்.

மேலும், 2020-ஆம் ஆண்டின் நடுவில், ஆதித்யா-எல்1 என்ற சூரியனை ஆய்வு செய்யும் செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது. ஆதித்யா-எல்1 திட்டம் சூரியனை ஆராய்வதற்கான இந்தியாவின் முதல் பணியாகும். இதை விண்ணுக்கு எடுத்து செல்ல 400 கிலோ பி.எஸ்.எல்.வி ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ராக்கெட் 6 விஞ்ஞான ஆராய்ச்சி செயற்கைகோள்களை சுமந்து செல்ல உள்ளது. அவை பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ‘லக்ரான்ஜியன் புள்ளி’ 1 (எல்-1)-யை சுற்றி உள்ள ஒளிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த நிகழ்வின் போது எந்தவொரு கிரகணமும் இல்லாமல் சூரியனை துல்லியமாக ஆராய முடியும் என கண்காணிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, டிசம்பரில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான ககன்யானின் முதல் ஆளில்லா சோதனை ராக்கெட்டையும் ஏவ திட்டமிட்டு உள்ளோம். ஆர்.எல்.வி. என்று அழைக்கப்படும் சிறிய வகை செயற்கைகோள்கள் செலுத்தும் கருவியையும் விண்ணில் ஏவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

;