science

img

இஸ்ரோவின் ஜிசாட்30 ஜனவரி 17ல் பாய்கிறது

பெங்களூர், ஜன. 13- இஸ்ரோவின் ஜிசாட்30 செயற்கைக்கோள், தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு  கயானாவில் இருந்து வரும் 17ஆம் தேதி அதிகாலை ஏவப்பட உள்ளது. ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவை களுக்கு பயன்படும் வகையில், இன்சாட்4ஏ செயற்கைக் கோளுக்கு பதிலாக ஜிசாட்-30 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. 3 ஆயிரத்து 357 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியான்-5 ராக்கெட் மூலம், வரும் 17ஆம் தேதி அதிகாலை 2.35 மணிக்கு ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த ஜிசாட்30 செயற்கைக் க்கோளானது இந்திய நிலப்பரப்பு மற்றும் தீவுகளின் பாது காப்பையும், வளைகுடா நாடுகள், ஏராளமான ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய விரிவாக்கப்பட்ட பாதுகாப்பையும் குறித்த விபரங்களை வழங்கும் என இஸ்ரோ கூறியுள்ளது.

;