பெங்களூரு இஸ்ரோ மையத் தில் சயின்டிஸ்ட் இன்ஜினிய ராகப் பணியாற்றிக் கொண்டி ருக்கிறேன். நான் பிறந்தது விழுப்புரத் தில். பள்ளிப் படிப்பை அரசுப் பள்ளியில் தான் படித்தேன். பள்ளியில் படித்தவரை நான் ஒரு ஆவரேஜ் ஸ்டூடன்ட் (சராசரி மாணவன்). அடுத்து என்ன படிக்க வேண் டும், எங்கே படிக்க வேண்டும் என்று எந்த ஒரு திட்டமும் எனக்கிருந்ததில்லை. பெற்றோர், குடும்பம் தரப்பில் யாருக்கும் கல்வியில் பெரிய பின்புலம் இல்லை. நண்பர்களோடு சேர்ந்து டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (DME) படிப்பில் சேர்ந்தேன். கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக கோவை லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் நிறுவ னத்தில் சீனியர் இன்ஜினியராகப் பணி யில் சேர்ந்தேன். வேலை செய்துகொண்டி ருந்த போதே ஏரோஸ்பேஸ் ரிசேர்ச் (விண் வெளி ஆராய்ச்சி) மீது எனக்கு அதிக ஈடு பாடு உண்டானது.
அப்போதுதான் இந் துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் இன்ஸ்டிட்யூட் பெங்களூருவில் ஹெலிகாப்டர் டிவிஷன் எனப்படும் ரோட்டரி விங் டிசைன் அண்ட் ரிசேர்ச் சென்டரில் டிசைன் விங் இன்ஜினி யராக பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து எனது கணவு மையமான இஸ்ரோவில் பணி புரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.எனது ஆராய்ச்சிக் கட்டுரைகள் சர்வதேச புகழ் பெற்ற இதழ்களில் பிரசுரமாகின. பல சர்வ தேச அறிவியல் அரங்குகள் பேப்பர் பிர சன்டேஷன் செய்து வெற்றிகரமாக முனை வர் பட்டம் பெற்றேன். இஸ்ரோவின் முதல் நானோ சாட்டி லைட் குழுவை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பு கிடைத்தது. அதன்பின்னர் மூன்று நானோ சாட்டிலைட்டுகளை ஏவி யுள்ளோம். சந்திரயான்-2 திட்டத்தின் அசோசியேட் ப்ராஜக்ட் டைரக்டராக இருந்தேன். சந்திரயான்-3 திட்டத்தில் எனக்கு திட்ட இயக்குநர் பதவி கொடுக் கப்பட்டுள்ளது. இது இஸ்ரோவுக்கு மிகப்பெரிய மிஷன். நான் ஓர் எளிமையான நபர். என்னால் இவ்வளவு தூரம் வர முடியும் என்றால் எல்லோராலும் முடியும். வாய்ப்புகள் எல்லோருக்கும் இருக்கின்றன. அதை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்கி றோம் என்பது நம் கைகளில் தான் இருக்கி றது.