ஸ்ரீஹரிகோட்டா,செப்.1- சந்திரயான்- 2 விண்கலத் தின் நிலவின் இறுதி சுற்று வட்டபாதைக்குள் வெற்றிகர மாக நுழைந்தது. நிலவை ஆய்வு செய்வ தற்காக இஸ்ரோவால் வடி வமைக்கப்பட்ட சந்திரயான்- 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவுகலன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமி யின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் -2 விண்கலமா னது, ஆகஸ்ட் 14 அன்று பூமி யின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பய ணிக்கத் துவங்கியது.
ஆர்பிட்டர், லேண்டர் மற் றும் ரோவர் என மூன்று நிலை களை கொண்ட இந்த விண்க லம், ஆகஸ்ட் 20-ல் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது. அதன்பின் நில வில் தரையிறங்குவதற்காக அதன் சுற்றுவட்டப் பாதை யின் விட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதியன்று சந்திர யான் 2 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை ஐந்தாவது மற்றும் இறுதி முறையாக மாற்றியமைக்கப்பட்டது. இதன் மூலமாக நிலவின் தரைப் பகுதியை நெருங்கி வரும் சந்திரயான்-2 விண்கலமா னது, செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.