science

img

புவி சுற்றுப் பாதையில் இருந்து இன்று விலகுகிறது ‘ஆதித்யா எல்-1’

சென்னை, செப்.18- ‘ஆதித்யா எல்-1’ விண்க லம் புவி சுற்றுப் பாதையில் இருந்து செவ்வாயன்று (செப்.19) விடுவிக்கப்பட்டு சூரியனை நோக்கி பயணிக்க உள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனின் புற வெளி ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’ விண்க லத்தை இந்திய விண் வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம், ‘பிஎஸ் எல்வி சி-57’ ராக்கெட் மூலம்  ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து கடந்த  செப்.2-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.  குறைந்தபட்சம் 235 கி.மீ.  தொலைவும், அதிகபட்சம் 19,500 கி.மீ. தொலைவு கொண்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்க லம் நிலைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து, பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப் பாட்டு மையத்தில் இருந்து  விண்கலத்தின் சுற்றுப் பாதை நீட்டிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.  அதாவது, விண்கலம் புவிக்கு அருகில் வரும் போது அதிலுள்ள உந்து விசை இயக்கப்பட்டு சுற்றுப் பாதை தொலைவு படிப்படி யாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி, விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை இது வரை 4 முறை மாற்றிய மைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 256 கி.மீ தொலைவும், அதிகபட்சம் 1,21,973 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் தற்போது விண்கலம் பயணித்து வருகிறது. இந்த நிலையில், அதற்கு அடுத்த கட்டமாக ஆதித்யா விண்கலம் செப்.19-ஆம்  தேதி புவிவட்டப் பாதையில் இருந்து விலக்கப்பட்டு சூரி யனை நோக்கி பயணிக்க தொடங்க உள்ளது.  அதற்கான ஆயத்தப் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து, 4 மாத கால பயணத்துக்குப் பின்னர் புவியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள எல்-1 பகுதி அருகே விண்க லம் நிலை நிறுத்தப்பட்டு ஆய்வுப் பணிகளை மேற் கொள்ளும்.