politics

img

15 லட்சம் கேட்டு மோடிக்கு கடிதம்

அனுப்புநர்

          கேபி.கருப்பு

          No 3

         கோவில் தெரு

         புதுப்பாளையம்

         கடலூர் மாவட்டம்


பெறுநர்

       மாண்புமிகு மோடி

                 அவர்கள்

        இந்தியப் பிரதமர்

         புதுதில்லி.

         இந்தியா


நாள் - 3.2.19


ஐயா வணக்கம்,


பொருள் -

தாங்கள் தருவதாக வாக்குறுதி அளித்த ரூ 15,00,000 பணத்தை உடனடியாக 

எனது வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி வேண்டுதல்:-


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் பிரதமராகப் போட்டியிட்டுப் பெருமைக்குரிய வெற்றியை ஈட்டினீர்கள்..


மூன்று முறை தமிழகத்தில் பரப்புரை செய்தீர்கள்.


அந்த மூன்று கூட்டத்திலும் , 

"நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல லட்சம் கோடிக் கறுப்புப் பணத்தை மீட்பேன் !


 மீட்டவுடன் ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்கணக்கில் ரூபாய் பதினைந்து லட்சம் செலுத்துவேன் என்றீர்கள் !


அதையும் நூறே நாளில் தருவதாகப் பொது மேடையில் வாக்குறுதி அளித்தீர்கள் !


 உங்களைத் தொடர்ந்து பேசியவர்களும் அதை ஆமோதித்தார்கள் !


இந்தியா முழுவதும் இதைச்சொல்லியே பரப்புரை செய்தீர்கள் !


பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி செய்கிறீர்கள் !


 நீங்கள் வாக்குத்தவறாத பிரம்மச்சாரி என்று எங்கள் ஊர் எச்.ராஜா அவர்களும் பலமுறை கூறியுள்ளார்.


ஐயா , 


நீங்கள் பிரச்சார மேடையில் இருந்து கீழே இறங்கிய அடுத்த நொடி ,


 உங்கள் வாக்குறுதியை நம்பி பதினைந்து இலட்சம் கடனாகப் பெற்றுவிட்டேன் !


வட்டி கொடுத்து என்னால் சமாளிக்க முடியவில்லை.

 நூறுநாளில் தருவதாக,

தங்கள் வாக்குறுதியை நம்பிக் 

கடன் வாங்கி விட்டேன்.


100 நாள் இப்போது 1265நாளாகி விட்டது !


ஐயா நீங்கள் மானஸ்தன் !


 பலமுறை உங்களைத் தொடர்பு கொண்டேன்.

நீங்கள் வெளிநாட்டில் இருப்பதாகச் சொன்னார்கள் !


நீங்கள் கறுப்புப் பண மீட்பில் இருந்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் !


 எனக்குக்  கடன் தந்தவர்களும் அதை நம்பினார்கள் !


ஆனால், கடந்த சில மாதங்களாகக் கறுப்புப் பண விவகாரம் குறித்துப் பேச மறுக்கிறீர்கள்.


உங்கள்  மன் கீ பாத்திலும் பதினைந்து லட்சம் பற்றிப் பேச மறுக்கிறீர்கள்!


உங்கள் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.


ஆனால் ,  எனக்குப் பணம் கொடுத்தவர்களைச் சமாளிக்க இயலவில்லை .


அதில் பல வங்கிகளும் அடக்கம். உங்கள் அருண்ஜெட்லி , வாராக் கடன் வசூல்களை வேறு தீவிரப்படுத்தி உள்ளார் !


ஜி...  விஜயமல்லய்யாவைப் போல் நான் ஓடி ஒளிபவன் அல்ல !


என் நேர்மையை வங்கிகள் சந்தேகிப்பதில் எனக்குக் கவலை இல்லை !

அதன் மூலம் உங்கள் நேர்மையையும் அவர்கள் சந்தேகிப்பதை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை !


எங்கள் வீட்டில் மொத்தம் 4 பேர்.


மொத்தம் *நீங்கள் எமக்குத் தரவேண்டிய தொகை 60 லட்சம் ரூபாயை

உடனடியாகக் கீழ்க்காணும் 

எனது வங்கிக் கணக்கில் சேர்க்கவும் !


இது அவசர வேண்டுகோள் ஐயா

            நன்றி


                       ×இப்படிக்கு×


                    இந்திய குடிமகன்

                       கேபி.கருப்பு


முக்கியக் குறிப்பு -

 

 ஐயா இக்கடிதத்தைப் பகிரும்

 என் நண்பர்கள் வங்கிக் கணக்கிலும் 15,00,000 செலுத்தவும் .


       நன்றி. !

;