காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் ஒருவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குறித்து கைது செய்து நாடகத்தை அரங்கேற்றினர்.
2007-ம் ஆண்டில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியது. இதற்கு, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கனவே இந்த வழக்கில், கடந்த ஆண்டு கார்த்தி சிதம்பரம் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் சிதம்பரமும் இடம்பெற்றிருப்பதால், அவரும் கைதுசெய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, டெல்லி நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார் ப.சிதம்பரம். அவரது முன்ஜாமீனுக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரைக் கைதுசெய்து விசாரிக்கவேண்டிய கட்டாயம் இருப்பதாக, இரு அமைப்புகளும் நீதிமன்றத்தில் முறையிட்டன. டெல்லி உயர்நீதிமன்றம், அவரது முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பு இன்று காலை மேல்முறையீடு செய்தது. ஆனால், மனு பட்டியலிடப்படாததால், மனுவை இன்றைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா, தலைமை நீதிபதியை அணுகுமாறு கூறினார். இதையடுத்து, அயோத்தி தொடர்பான வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி இடம் பெற்றிருந்ததால், அந்த வழக்கு விசாரணை முடிந்த பின், தலைமை நீதிபதியிடம் முறையிட ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் முடிவு செய்திருந்தனர்.
ஆனால், அயோத்தி வழக்கு முடிந்ததும் அரசியல் சாசன அமர்வு கலைந்து சென்றது. இதனால், ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருமா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கிடையில் காலை முதல் ஊடகங்கள் முழுவதும் ப.சிதம்பரம் தலைமறைவாகியிருக்கிறார் என தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இரவு 8.15 மணியளவில் ப.சிதம்பரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், “ஜனநாயகம், சுதந்திரத்தில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை என்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.
எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. இந்த வழக்கில் என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவுசெய்யவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு குழப்பங்கள் நடந்துள்ளன. பொய்யர்கள் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர் .7 மாதங்களுக்குப் பின், எனது ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகத்துள்ளது. உயர் நீதிமன்றம் நிராகரித்ததால் எனது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். சட்டத்தின் பிடியில் இருந்து நான் தப்பிக்க முயல்வதாகக் கூறுவதை எதிர்க்கிறேன். நீதிமன்ற உத்தரவை நான் மதிக்கிறேன். சட்டத்தையும் மதிக்கிறேன். அதேபோல், விசாரணை அமைப்புகளும் சட்டத்தை மதிக்கும் என நம்புகிறேன்'' என்றார்.
பின்னர் வழக்கறிஞர்களுடன் தனது ஜோர் பார்க் வீட்டிற்கு சிதம்பரம் சென்றார். அப்போது அங்கு காத்த்திருந்த சிபிஐ அதிகாரிகள் அவரை மறைக்கவோ கைது செய்யவோ இல்லை. பின்னர் சிதம்பரத்தின் வீட்டு கதவு மூடப்பட் பின்னர் 15 நிமிடங்களுக்கு பின்.. அங்கிருந்த சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தின் வீட்டின் சுவர் ஏறி குறித்து உள்ளே சென்றனர். இதற்கிடையில் ப.சிதம்பரத்தின் வீட்டின் முன்பு குவிந்த காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர். ப பின்னர் சரியாக இரவு 9,45 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்து காரில் அழைத்து சென்றனர்.