politics

மணக்கோலத்தில் வாக்களித்த தம்பதி

திருநெல்வேலி, ஏப்.18-நெல்லை மாவட்டம் வள்ளியூரில் திருமணம் முடிந்த கையோடு தம்பதியினர் வாக்களித்தனர்.நாடாளுமன்ற தேர்தல் 2019-க்கானவாக்குப்பதிவு வியாழனன்று நடைபெற்றது. இதில் அதிக வயதானவர் கள், இளம் வாக்காளர்கள் என பலதரப்பினரும் வாக்களித்தனர். இதில்திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் திருமணம் முடிந்த கையோடு தம்பதியினர் வாக்களித்தனர். வியாழக்கிழமை முகூர்த்த தினம் என்பதால் வள்ளியூரில் முத்துராம் - சுப்புலட்சுமி ஆகியோருக்கு திருமணம் முடிந்தது. திருமணம்முடிந்த கையோடு அங்குள்ள வாக்குச்சாவடிக்கு வந்த தம்பதிகள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

;