politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக அமைச்சர் ஜெயக்குமார்:- தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும்.
ச.சா - அந்த ரெண்டு மொழி எதுன்னு சொல்லிருங்க..!!
 

தமிழக அரசு: மக்களுக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு சிறை.
ச.சா - இதுவா பிரச்சனை..ஆளுங்கட்சிக்காரங்க வெக்குறத எப்புடித் தடுக்குறதுன்னு சொல்லுங்க..!!
 

தமிழக அமைச்சர் பாண்டியராஜன் :- 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதால் மாணவர்களுக்கு எந்த சுமையுமில்லை.
ச.சா - ஏன்.. தேர்வ அவங்கதான எழுதப் போறாங்க..!!
 

மத்திய அமைச்சர் நிர்மலா  சீதாராமன் :- பொருளாதாரம் வளர்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
ச.சா - மேடம்.. தலைகீழா வெச்சுப் படிச்சுட்டு இருக்கீங்க..!!

;