internet

img

தொழில் நுட்ப கோளாறு காரணமாக ட்விட்டர்  முடக்கம்

ட்விட்டர் சனிக்கிழமை அதிகாலை முடங்கியதில் பயனாளர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
உலகம் முழுவதும்  ட்விட்டர் பயனாளர்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். பல பிரபலங்கள் ட்விட்டர் வழியாக தங்கள் கருத்தை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ட்விட்டர் வலைதளம் இன்று அதிகாலை சுமார் 20 நிமிடங்களுக்கு முடங்கியது. இதனால் அதன் பயனாளர்கள் அவதிக்குள்ளாயினர். பின்னர் அந்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. 
இதுகுறித்து ட்விட்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ட்விட்டர் பயன்பாடு சில நிமிடங்களுக்கு தடைப்பட்டது. இதனால் பயனாளர்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளைப் பயன்படுத்த முடியாதது வருத்தமளிக்கிறது. தற்போது அந்த தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டுவிட்டது. தடைக்கு வருந்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.