internet

img

ஊரடங்கு காலத்தில் காலாவதியான சாம்சங் சாதனங்களுக்கு வாரண்ட்டி நீட்டிப்பு

இந்தியாவில், மார்ச் 20 முதல் மே 31-ஆம் தேதி வரை காலாவதியான சாம்சங் சாதனங்களுக்கு ஜூன் 15 வரை வாரண்ட்டி நீட்டிக்கப்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கோவிட்-19 பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் மே 31 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் சில சேவை மையங்கள் மூடப்பட்டது. தற்போது கட்டுப்படுத்தப்பட்ட இடங்களை தவிர்த்து, மற்ற இடங்களுக்கு சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில், மார்ச் 20 முதல் மே 31-ஆம் தேதி வரை காலாவதியான சாம்சங் சாதனங்களுக்கு ஜூன் 15 வரை வாரண்ட்டி நீட்டிக்கப்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் படி, கட்டுப்படுத்தப்பட்ட இடங்கள் தவிர்த்து மற்ற இடங்களில், டிவி, ஸ்மார்ட்போன், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட சாம்சங் சாதனங்களுக்கு ஜூன் 15-ஆம் தேதி வரை வாரண்ட்டி நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

;