internet

img

ஹேக்கர்களுக்கு 6.5 மில்லியன் டாலர் பரிசு வழங்கிய கூகுள்!

கூகுள் நிறுவனம், தனது தயாரிப்புகளை ஹேக் செய்யும் ஹேக்கர்களுக்கு சுமார் 6.5 மில்லியன் டாலர்களை பரிசாக வழங்கியுள்ளது.

கூகுள் தயாரிப்புகளான குரோம், ஆண்ட்ராய்ட் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து கூகுளிற்கு தெரிவிப்பதன் மூலம் இணையப் பாதுகாப்பிற்கு குறித்த ஹேக்கர்கள் உதவி புரிந்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் தனது தயாரிப்புகளை ஹேக் செய்து, அதன் குறைபாடுகளை தெரிவித்த ஹேக்கர்களுக்கு சுமார் 6.5 மில்லியன் டாலர்களை கூகுள் நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது. இது இந்திய மதிப்பில் ஏறத்தாழ 50 கோடி ரூபாய்கள் ஆகும்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் இணையதளப் பாதுகாப்பிற்கு உதவி செய்தமைக்காக இப்பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் Vulnerability Reward Programs (VRPs) திட்டத்தை அறிமுகம் செய்தது. அன்றிலிருந்து, இவ்வாறு பரிசுத்தொகைகளை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

;