கோவிட்-19 தொற்று காலத்தில், பயணக் கட்டுப்பாடுகள் குறித்த எச்சரிக்கைகளை பயனர்களுக்கு கூகுள் மேப்ஸ் வழங்கி வருகிறது.
உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,99,611 ஆக உயர்ந்துள்ளது. அதே போல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,08,737 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூழலில், பல நாடுகளின் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவிட்-19 தொற்று காலத்தில், பயணக் கட்டுப்பாடுகள் குறித்த எச்சரிக்கைகளை பயனர்களுக்கு கூகுள் மேப்ஸ் வழங்கி வருகிறது.
குறிப்பாக ரயில் நிலையங்கள், பேருந்துகளில் எவ்வளவு நெரிசலாக இருக்கக்கூடும் அல்லது ஒரு குறிப்பிட்ட பாதையில் பேருந்துகள் குறிப்பிட்ட கால அட்டவணையில் இயங்குகிறதா என்பதை சரிபார்க்க பயனர்களை அனுமதிக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. அர்ஜெண்டினா, பிரான்ஸ், இந்தியா, நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் போக்குவரத்து எச்சரிக்கைகள் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.