ஆண்ட்ராய்டிற்கு எதிரான ஹூவாய் நிறுவனத்தின் ஹாங்மெங் அல்லது ஓக் ஓஎஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் தயாரிப்பாளராகவும், 5ஜி தொலைத் தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பதில் முதன்மையாக விளங்கும் ஹூவாய் நிறுவனத்தை கருப்பு பட்டியலில் அமெரிக்க அரசு இணைத்துள்ளது. இதன் காரணமாக ஹூவாய் நிறுவனம், ஆண்ட்ராய்டு செயலிகள் மற்றும் ஹார்ட்வேர் கருவிகளை பயன்படுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹூவாய் நிறுவனம், தனது புதிய இயங்குதளமான ஹாங்மெங் (HongMeng) / ஆர்க் (ark) அல்லது ஓக் (oak) விரைவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஓஎஸ் கொண்ட 10 லட்சம் மொபைல்கள் சோதனைக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை பல்வேறு நாடுகளில் உள்ள பயனாளர்களிடம் வழங்கி சோதனை செய்ய உள்ளது. மேலும் கூகுள் பிளே ஸ்டோர் போன்ற ஆப் ஸ்டோரினை தனது இயங்குதளத்தை நிர்வகித்து வருகின்றது. இந்த இயங்குதளத்தில் செயலிகளை உருவாக்க டெவலப்பர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் பெரும்பாலான நாடுகளில் தனது சொந்த ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன், லேப்டாப், கணினி, டிவி, அணியக்கூடிய கருவிகள் மற்றும் கார்களுக்கான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவற்றை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஹூவாய் நிறுவனத்தின் ஓக் ஓஎஸ் நிச்சயமாக கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு மிகுந்த சவாலாகவே விளங்கும் என கருதப்படுகின்றது.