வரும் மார்ச் 31-ஆம் தேதி நடக்க இருந்த ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்.இ. 2 வெளியீடு நிகழ்வை, அந்நிறுவனம் ரத்து செய்துள்ளது.
புதிய ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்கள் வெளியீட்டுக்காக, நீண்ட காலமாக ஆப்பிள் பயனர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சாதனங்களை வெளியீடு நிகழ்வை, வரும் மார்ச் 31 ஆம் தேதி நடத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. இவ்விழாவில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்.இ 2 அல்லது ஐபோன் 9, ஐபேட் ப்ரோ உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அந்த நிகழ்வை ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.