internet

img

செங்கல்பட்டு முதல் திருச்சி வரை தானாக அபராதம் விதிக்கும் கருவிக்கு ரூ.25 கோடி

திருச்சி, ஆக.19- தமிழகத்தில் பேருந்து கட்டணம் உய ராது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திருச்சியில் மோட்டார் ஆய்வாளர்க ளுக்கு வாகன தணிக்கை பணிக்காக தமிழக போக்குவரத்து துறை சார்பில் இ-சலான் கருவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிழக்கு வட்டார போக்குவரத்துக் கழக அலு வலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்  சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு,  இ-சலான் கருவிகளை வழங்கினார். இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நட ராஜன், வளர்மதி, போக்குவரத்து ஆணை யர் சமயமூர்த்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் மயில்வாகணன் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மேலை நாடுகளைப் போல போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து தானாக அபராதம் விதிக்கு கருவிகளை பொருத்தும் பணி ரூ. 25 கோடி செலவில் செங்கல்பட்டு முதல் திருச்சி வரை நடந்து வருவதாகக் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்திற்கு 825 மின்சாரப் பேருந்து களை மத்திய அரசு வழங்க உள்ளது என்றும், அவை சென்னை, திருச்சி, கோவை,  தஞ்சை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு விரைவில் இயக்கப்படும் என்றும் கூறினார்.