internet

img

அதிநவீன தானியங்கி கேமராக்களின் சேவை தொடக்கம்

சென்னை, ஆக.28- சென்னையில், வாகன எண்ணை வைத்து அதன் உரிமையாளரை கண்டு பிடிக்கும் அதிநவீன கேமராக்களின் சேவையை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை யில் உள்ள முட்டுக்காடு, கானாத்தூர் ஆகிய  பகுதியில் ANPR எனப்படும் அதி நவீன  தானியங்கி கேமராக்கள் பொறுத்தப் பட்டுள்ளன. இதன் செயல்பாட்டையும், புதி தாக கட்டப்பட்டுள்ள புறநகர் காவல் நிலையத்தையும் மாநகர காவல் ஆணை யர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

இந்த அதிநவீன கேமராக்கள் சாலை யில் செல்லும் வாகனங்களின் பதிவு எண்களை படம் பிடித்து அதன் உரிமை யாளரின் விவரங்களை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் திறன் கொண்டது. இதனால் குற்றச்செயல்கள், வாகன விதி மீறல்கள், விபத்துகள் உள்ளிட்டவைகளின் போது வாகன உரிமையாளர்களை எளி தில் அடையாளம் காணலாம். தொடர்ந்து சோலிங்கநல்லூரில் 217 கண்காணிப்புக் கேமராக்களின் இயக்கத்தை தொடங்கி வைத்துப் பேசிய மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், சிசிடிவி கேம ராக்களால் குற்றச்சம்பவங்கள் குறைந்து விட்டதாக கூறினார். சென்னை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நன்கொடை வழங்கிய நபர்களுக்கு மாநகர காவல் துறை சார்பில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நன்கொடையாளர்களுக்கு ஏ.கே.விஸ்வ நாதன் உணவுகளை பரிமாறி மகிழ்ந்தார்.