மூன்றுநாள் உணர்வற்று
மருத்துவமனையில்...
நான்காம் நாள் உயிரற்று
கட்சி அலுவலகத்தில்...
நான்கு நாட்களும்
பிரிக்கப்படாத நாளிதழும்
வெறுமையாய் இருக்கையும்
தீக்கதிர் அலுவலகத்தில்...
45 ஆண்டுகால பொதுவாழ்வின்
சகாப்தம் நிறைவுபெற்று,
'ஒரு கம்யூனிஸ்ட்' என்ற
உலகின் மிகச்சிறந்த புகழோடு
எங்கள் மனங்களில் நிறைந்து
எப்போதும் உரம் ஊட்டுவீர்கள்
தோழர் வி.எஸ்!
- வெண்புறா