internet

img

சோமேட்டோவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மெக்டொனால்ட்ஸ்

சோமேட்டோவை தொடர்ந்து, பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, சோமேட்டோ நிறுவனம் சப்ளை செய்த அசைவ உணவுகளில் ‘ஹலால்’ என குறியிட்டு பாகுபாடு காட்டுவதாக சமீபத்தில் சிலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து, பலர் சோமேட்டோ நிறுவன செயலியில் இருந்து வெளியேறினர். அதே போன்று தற்போது மெக்டொனால்ட்ஸ் நிறுவனமும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. 

மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில், ”உங்கள் ஓட்டல்கள் எல்லாம் ஹலால் சான்று பெற்றவையா?” என பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.  இதற்கு பதில் அளித்த மெக்டொனால்டு, “எங்கள் உணவகங்களில் நாங்கள் பயன்படுத்தும் இறைச்சி மிக உயர்ந்த தரம் வாய்ந்தது. மேலும் எச்ஏசிசிபி (HACCP) சான்றளிக்கப்பட்ட மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வினியோகஸ்தர்களிடம் இருந்து இறைச்சி பெறப்படுகிறது. எங்கள் உணவகங்களில் ஹலால் சான்றிதழ்கள் உள்ளன. எங்களின் எந்த உணவகத்திற்கு சென்றாலும் அந்த உணவக மேலாளர்களிடம் சான்றிதழை காட்டும்படி  நீங்கள் கேட்கலாம்” என கூறியிருந்தது.

“மெக்டொனால்ட்ஸ் நிறுவனமே, இந்துக்களாகிய நாங்கள் ஜட்கா உணவை விரும்புகிறோம்” என்றும், “தேவையில்லாமல் நான் ஹலால் இறைச்சியை சாப்பிட விரும்பவில்லை. எனக்கான விருப்பத் தேர்வு இருக்கிறதா? அல்லது நான் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் சாப்பிட வேண்டாமா?” என்றும் டுவிட்டரில் சிலர் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் இணையத்தில் விவாதப் பொருள் ஆகியிருப்பதால், மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் இருக்கிறது.