india

img

ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கு மரியாதை செலுத்த அகிலேஷுக்கு மீண்டும் அனுமதி மறுப்பு

லக்னோ சுதந்திரப் போராட்ட வீர ரும், ஜனதா கட்சியின் நிறு வனருமான ஜெயப்பிர காஷ் நாராயணின் 122ஆவது பிறந்த நாள் விழா வெள்ளியன்று (அக். 11) கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஜெயப் பிரகாஷ் நாராயண் சர்வதேச மையத்தில் (ஜேபிஎன்ஐசி) வெள்ளி யன்று காலை மரியாதை செலுத்த “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அகிலேஷ் வரு கைக்கு முன்னரே எவ்வித முன்னறி விப்பும் இல்லாமல் ஜேபிஎன்ஐசி மையத்தை உத்தரப்பிரதேச பாஜக அரசு மூடியது. மேலும் ஜேபி என்ஐசி மையத்தின் முன்னாள் தடுப்புகளை அமைத்து போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

உத்தரப்பிரதேச பாஜக அரசின் இந்த இழிவான செயல்பாட்டிற்கு அகிலேஷ் கண்டனம் தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் கூறுகை யில்,“நான் வருவதைத் தடுக்க வேண்டும் என்றே ஜேபிஎன்ஐசி மையத்தை பாஜக அரசு மூடியுள் ளது. காலனித்துவ சக்திகளிடம் இருந்து பாஜக தந்திரோபாயங்க ளை கையாண்டு வருகிறது. இந்த இழிவான செயலைக் கண்டித்து ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக் கத்தின் மூலம் பொது அரசியல் வாழ்வில் களம் கண்ட பீகார் முதல் வரும், ஐக்கிய ஜனதாதள தலைவ ருமான நிதிஷ் குமார் பாஜகவுட னான கூட்டணியில் இருந்து விலக வேண்டும். பாஜக சோசலிஸ்டுக ளை தொடர்ந்து அவமதிக்கிறது” என அவர் கூறினார்.

பாஜக அரசு மழுப்பல்

கடந்த ஆண்டும் இதே போல ஜெயப்பிரகாஷ் நாராயணின் பிறந்த நாளுக்கு மரியாதையை செலுத்த அகிலேஷை ஜேபி என்ஐசி மையத்திற்குள் நுழைய அனுமதி மறுத்தது. அதே போல இந்த ஆண்டு ஜேபிஎன்ஐசி மையத் தில் பராமரிப்புப் பணி நடந்து வரு வதால் பாதுகாப்புக் காரணங்க ளுக்காக அனுமதி மறுக்கப்பட்ட தாக லக்னோ மேம்பாட்டு ஆணை யம் மூலம் சாக்குப் போக்கு சொல்லி உத்தரப்பிரதேச பாஜக அரசு மழுப்பி யுள்ளது.